கேபிள் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்த இடத்தில் பிரதமர் ஆய்வு..!

குஜராத்தில் 140க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட கேபிள் பாலம் விபத்து நிகழ்ந்த பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஹெலிகாப்டர் மூலம் மோர்பி நகருக்கு சென்ற பிரதமர், முதலமைச்சர் பூபேந்திர படேலுடன் இணைந்து, மீட்புப்பணிகளை பார்வையிட்டார். மீட்புப்படை வீரர்களுடனும் பிரதமர் கலந்துரையாடினார். விபத்தில் படுகாயமடைந்து, மோர்பி சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.   Source link

‘அப்பு கடவுளின் குழந்தை’ என கன்னடத்தில் உருக்கமாக பேசி புனித் ராஜ்குமார் ரசிகர்களை மனதில் இடம்பிடித்த ரஜினிகாந்த்

கன்னடத்தின் பெருமைக்குரிய நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று (நவம்பர் 1) ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் புகழ்பெற்ற மெதடிஸ்ட் தேவாலய படிகளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில் மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். ரஜினிகாந்த் தவிர ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் சுதா மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்ட இந்த விழாவில் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி-யிடம் விருது வழங்கப்பட்டது. அப்போது பேசிய ரஜினிகாந்த் “67வது கன்னட … Read more

கன்னியாஸ்திரிகள் அறையில் தங்கி இருந்த நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை: உருக்கமான கடிதம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா பெருமலை கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா மகள் இந்துஜா(18). இவர், வேதாரண்யம் அருகே கடினல்வயல் பகுதியில் தங்கி தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இங்கு 14 மாணவிகள் மட்டுமே படித்து வருகின்றனர். இதில் 13 பேர், தினமும் வீட்டிலிருந்து வந்து செல்கின்றனர். இந்துஜா மட்டும் ஏழ்மை காரணமாக பயிற்சி கல்லூரியில் உள்ள கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாணவி கழிவறையில் தாவணியால் … Read more

பள்ளிகள் பராமரிப்புக்கு ரூ.119 கோடி ஒதுக்கிய தமிழக அரசு: அன்புமணி ராமதாஸ் வரவேற்பு

சென்னை: தமிழகத்தில் 37,387 அரசு பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு, பராமரிப்பு பணிகளுக்காக ரூ.119.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். பள்ளிகளில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் செய்து தர அரசின் மானியம் உதவும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பிரெஞ்ச் அரசின் உயரிய கௌரவமான ‘செவாலியர் விருது'க்கு கர்நாடக சங்கீத பாடகி அருணா சாய்ராம் தேர்வு!

பெங்களூரு: பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார். தனது பாடும் திறமைக்காக மட்டுமல்லாமல், இந்திய-பிரான்ஸ் உறவின் வளர்ச்சிக்காக அருணா சாய்ராம் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இந்த விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செவாலியர் விருதிற்கு அருணா சாய்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து பிரான்ஸ் குடியரசின் கலாச்சார அமைச்சர் ரீமா … Read more

கர்நாடகாவில் தேர் சரிந்து விழுந்து விபத்து:| Dinamalar

பெங்களூரு: கர்நாடகாவில் கோவில் திருவிழா தேரோட்டத்தில் தேர் சரிந்து விழுந்த சம்பவம் நடந்தது. கர்நாடகாவில் சாம்ராஜநகர் பகுதியில் சன்னப்பனபுரா கிராமத்தில் பிரசித்த பெற்ற வீரபத்ரேஸ்வரா கோவில் ஐப்பசி மாத திருவிழா துவங்கியது. இத்திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது தேர் கோவிலை சுற்றி வந்த சிறிது தூரத்தில் அதன் சக்கரம் முறிந்து சரிந்து விழுந்தது.கீழ சாய்வதை அறிந்த பக்தர்கள் தெறித்து ஓடினர். இதில் யாருக்கும் … Read more

ரியோ ராஜ் படத்திற்கு க்ளாப் அடித்த லோகேஷ் கனகராஜ்

சின்னத்திரையில் ஆங்கர், நடிகர் என கலக்கி வந்தவர் ரியோ ராஜ். 'சரவணன் மீனாட்சி' தொடரில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த பாராட்டுகளை பெறவே தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். அதன்பலனாக 2017ம் ஆண்டில் 'சத்ரியன்' படத்தின் மூலம் முதல்முறையாக சினிமாவிலும் என்ட்ரியானார். இதனை தொடர்ந்து 2 படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ரியோ ராஜூக்கு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' திரைப்படம் மட்டுமே சுமாரான ஹிட் படமாக அமைந்தது. தற்போது ரியோ ராஜ் புதிய படமொன்றில் மீண்டும் ஹீரோவாக … Read more

“ஈஸ்வரன் கோயிலில் கந்த சஷ்டி படித்த ஒரே கரகாட்ட கோஷ்டி..!" – அண்ணாமலையைச் சாடிய செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. 1.50 லட்சம் மின் கம்பங்கள் தயாராக உள்ளன. செந்தில் பாலாஜி “காக்கும் கடவுளாக காவல்துறை துணிவுடன் செயலாற்றியது” – கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அண்ணாமலை உலத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி எது என்ற காமெடியை பார்த்திருப்பீர்கள். கோட்டை ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தது கோமாளிதான். இதைவிட கோமாளித்தனம் வேறு … Read more

“வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்தது” – ஆளுநர் ஆர்.என்.ரவி

வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன்பு இந்தியா, உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைந்த தினத்தை கொண்டாடும் வகையில், நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஆளுநர், மேற்கத்தியர்கள் வந்த பிறகு இந்தியாவின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாகவும் நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டு விட்டதாகவும் கூறினார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். Source link