மாண்டஸ் புயல்: சென்னை, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை; மாண்டஸ் புயல் மிரட்டல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம்  உள்பட 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாண்டஸ் புயல் நாளை இரவு புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டாவில் கரையைக் கடக்க உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெருபாலான மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதையடுத்து,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே,வேலூர் மாவட்டத்தில் இன்று பிற்பகல் முதல் நாளை வரை  பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.