இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரஷ்யா; ஜி7 நாடுகள் கடுப்பு..!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 9 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக, உலகம் முழுவதும் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. பல மேற்கத்திய நாடுகளில் கடும் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் உதவியால் உக்ரைன் போர் நீண்டு வருவதால், போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடதக்கது. அதேபோல் இந்த போரால் இலங்கை நாடு திவாலாகிவிட்டது.

உலக நாடுகள் பொருளாதார சரிவிலிருந்து மீள, உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகளை உலக நாடுகளின் தலைவர்கள் எடுத்து வருகிறார்கள். அந்தவகையில் ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் வருவாயை மட்டுப்படுத்தவும், , உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்புக்கு நிதியளிக்கும் திறனைக் கட்டுப்படுத்தவும், ரஷ்ய கச்சா எண்ணெய்யின் விலையை ஒரு பீப்பாய் 60 டால்ராகக் குறைக்க அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ஜி-7 நாடுகளின் கூட்டணி நேற்று ஒப்புக்கொண்டது.

இதனால் ரஷ்யாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பங்கு வகிக்க கூடிய கச்சா எண்ணெய் விலையை குறைத்ததால், வருவாய் கனிசமாக குறையும் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. ஆனால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், ரஷ்ய உயர் அதிகாரிகளும் விலை உச்சவரம்பை அமல்படுத்தும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வழங்க மாட்டோம் என்று பலமுறை கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் மேற்கத்திய நாடுகளின் இந்த புதிய அறிவிப்புக்கு ரஷ்யா வழக்கம் போல் எதிர்வினை ஆற்றியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடின் மற்றும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறுகையில், ”விலை கட்டுப்பாடு விதிக்கும் நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய மாட்டோம். ஜி7 நாடுகளின் முடிவானது, இலவச சந்தை கொள்கையை மாற்றியமைக்கும் வகையில் உள்ளது.

எவ்வளவு கட்டுப்பாடுகள் வந்தாலும், ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். இது போன்ற நடவடிக்கைகள், சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துவதுடன், விலையை அதிகரிக்க செய்து நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ எனக் கூறியுள்ளன.

இந்தநிலையில் ரஷ்ய எரிவாயு குறித்த ஜி7 நாடுகளின் முடிவுகளை ஏற்கமாட்டோம் என தெரிவித்த இந்தியாவின் ரஷ்யா வரவேற்றுள்ளது. இது குறித்து ரஷ்யாவின் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் கூறும்போது, ‘‘ கடந்த 5ம் தேதி ஜி7 நாடுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ரஷ்ய எரிவாயு விலை உச்சவரம்பை இந்தியா நிராகரித்துள்ளது வரவேற்கதக்கது. எரிவாயு விலை உச்ச வரம்பு என்பது சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது உலகளாவிய விற்பனை சங்கிலிகளை உடைக்கும். மேலும் எரிவாயு சந்தையை முற்றிலுமாக சிதைக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.