இமாச்சல பிரதேச புதிய முதல்வர் சுக்விந்தர்சிங் சுக்கு-க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து

இமாச்சல பிரதேசதின்  புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர்சிங் சுக்கு-க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
இமாச்சல பிரதேசமுதலமைச்சராக பொறுப்பற்றுள்ள ஸ்ரீ சுக்விந்தர் சிங் சுகு-வுக்கு வாழ்த்துக்கள். இமாச்சலப் பிரதேசத்தின் மேம்பாட்டிற்கு மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பை வழங்க நான் உறுதியளிக்கிறேன். என தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
இமாச்சல் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுக்வீந்தர் சிங் சுக்குவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமுதாயத்தின் அடிப்படை நிலையில் ஏற்படுத்தியுள்ள, உங்களது எழுச்சி ஊக்கமளிப்பதாக உள்ளதாக தமிழ்நாடு முதல்வர் கூறியுள்ளார். இமாச்சல்பிரதேச மக்களுக்கு தங்களது வெற்றிகரமான சேவை சிறக்க வாழ்த்துக்கள் என மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தை அடுத்து வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனையடுத்து, சிம்லாவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இமாச்சல் முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுக்குவும், துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிகோத்ரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த நிலையில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுக்விந்தர்சிங் சுக்கு-க்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.