குஜராத் தோல்விக்கு ஆம் ஆத்மி தான் காரணம்; காங்கிரஸ் சாடல்.!

182 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு, கடந்த 1 ஆம் தேதி முதற்கட்டமாக 89 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதம் உள்ள 93 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, கடந்த 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது.

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை, தொடர்ந்து 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலம் என்பதால், இங்கு மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதை, பாஜக கவுரவப் பிரச்னையாக பார்த்தது.

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்லில், இரண்டு கட்டங்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 156 இடங்களில், ஆளும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெறும் 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று கணக்கை தொடங்கியது. குஜராத் மாநிலத்தில் பாஜக இதுவரை இல்லாத வகையில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. மேலும், ஏழாவது முறையாக மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர உள்ளது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்த முதலமைச்சர் பூபேந்திர படேல், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து அதற்கான கடிதத்தை வழங்கினார். மேலும், தனது தலைமையிலான அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து ராஜினாமா செய்துள்ள பூபேந்திர படேல், நாளை பிற்பகல் 2 மணி அளவில், குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக, இரண்டாவது முறையாக பதவி ஏற்க இருக்கிறார். இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் குஜராத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு ஆம் ஆத்மி கட்சியை குற்றம்சாட்டியுள்ளார், ராஜஸ்தான் முதல்வரும் குஜராத் தேர்தல் பொறுப்பாளாருமான அசோக் கெலாட். இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ காங்கிரஸ் கட்சியின் குஜராத் தோல்விக்கு, ஆம் ஆத்மி கட்சி பெரும்பங்காற்றியது.

எதிர்க்கட்சிகள் அமளி..! – ராஜ்யசபாவில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம்!

காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டிய வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்ததே தோல்விக்கு காரணம். ஆம் ஆத்மி எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அவர்கள் பொய்யைத்தான் சொல்லி வருகிறார்கள். அதேபோல் பிரதமர் மோடி தொடர்ந்து மூன்று மாதங்களாக குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும் தோல்விக்கு காரணம். பாஜக கொண்டு வந்த தேர்தல் பத்திரங்களின் பெரும் முறைகேடு நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நிதியளிப்பவர்களை பாஜககாரர்கள் மிரட்டினர். அதன் மூலம் அனைத்து நிதியையும் தனது பாக்கெட்டுக்குள் பாஜக போட்டுக் கொண்டது” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.