திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 37 பேர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர். பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீரால் ஏற்பட்ட ஆற்று வெள்ளம் ஒருபுறம், ஓடை மறுபுறம் என கோட்டைக்குப்பம் கிராமம் தீவு போல் மாறியுள்ளது. அந்த வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.