வாரணாசி: சைக்கிள் ஓட்டுவது, சுற்றுசுழல் மாசு மற்றும் போக்குவரத்தை நெரிசல் குறைக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.
உ.பி., மாநிலம் வாரணாசியில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், ‘அனைவருக்கும் நலவாழ்வு திட்டம்’ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதில், நலவாழ்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய, மாநிலங்கள் கவுரவிக்கப்பட்டன.
இந்நிலையில் உ.பி., வாரணாசி நகரில் இன்று(டிச.,11) பா.ஜ., இளைஞரணி சார்பில் சைக்கிள் பேரணி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சைக்கிள் ஓட்டிய மத்திய அமைச்சர்:
இதையடுத்து, பா.ஜ., தொண்டர்களுடன் இணைந்து, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா சைக்கிளில் பயணம் மேற்கொண்டார்.
பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பா.ஜ.க. இளைஞரணி சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. சைக்கிள் ஓட்டுவது, சுற்றுசுழல் மாசு மற்றும் போக்குவரத்தை நெரிசல் குறைக்க உதவுகிறது. மேலும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இந்த தகவல் மக்களை சென்றடைய வேண்டும் என நாங்கள் விரும்பினோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement