டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி; பாஜக தலைவர் விலகல்.!

ஒன்றுப்பட்ட டெல்லி மாநகராட்சி டெல்லி வடக்கு, டெல்லி தெற்கு, டெல்லி கிழக்கு என 3 மாநகராட்சிகளாக 2011-2022 வரை பிரிக்கப்படிருந்தது. கடந்த மே மாதம் இவை அனைத்தும் மீண்டும் ஒருங்கிணைப்பட்டு டெல்லி மாநகராட்சியாக 250 வார்டுகளுடன் மாற்றப்பட்டது.

இந்தநிலையில் 250 வார்டுகளைக் கொண்ட தலைநகர் டெல்லியில், மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் 250 வார்டுகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறித்தியிருந்தது.
காங்கிரஸ்
சார்பில் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடியானதால் 247 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இது தவிர சுயேச்சைகளும் போட்டியிட்டனர்.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவி வந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சி இந்த முறை வெற்றி பெறும் என கணித்திருந்தது. அதன்படி, ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 7ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 7ஆம் தேதி டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களிலும், பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக 181 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருந்தது. ஆம் ஆத்மி கட்சி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 15 ஆண்டுகளாக நிர்வாகப் பொறுப்பில் இருந்த பாஜக தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களிடம் பாஜக சார்பில் குதிரை பேரம் பேசப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. ஆம் ஆத்மியின் 10 கவுன்சிலர்களை பேரம் பேசி விலைக்கு வாங்க 100 கோடி ரூபாய் பாஜக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.

இந்தநிலையில் பாஜகவின் தோல்வியைத் தொடர்ந்து, டெல்லி பாஜக தலைவராக இருந்த அதேஷ் குப்தா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக பாஜகவின் சாம்ராஜ்ஜியமாக இருந்த டெல்லி மாநகராட்சியை தற்போது ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளதால், அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மெனோபாஸ் பாலிஸி: ரவிக்குமார் எம்.பி., கேள்விக்கு அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்!

மேயர் பதவிக்கு பாஜக காய் நகர்த்திய நிலையில், ஆம் அத்மி கட்சியில் இருந்து மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் பாஜக வலுவான எதிர்கட்சியாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.