தெலங்கானாவில் வெடிவிபத்து: போலீசார் விசாரணை

ஐதராபாத்: தெலங்கானாவின் நிஜாமாபாத் நகரில் நடந்த வெடிவிபத்து குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் படா பஜாரில் நேற்றிரவு மர்ம பொருள் வெடித்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, வெடி விபத்தால் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து டவுன் போலீசார் கூறுகையில்:
மர்ம பெட்டியில் இருந்த ரசாயன கலவை வெடித்தது. இந்த வெடி விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தனிப்படை போலீசார் சம்பவ இடத்தில் இருந்து முக்கிய தடயங்களை சேகரித்து வருகின்றனர். வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.