ஹிமாச்சல்லில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறை வேற்றுவோம்: ராகுல் உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சிம்லா: அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் ஹிமாச்சல பிரதேசத்தின் நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது என காங்., எம்.பி ராகுல் கூறினார்.

latest tamil news

ஹிமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வராக, ராகுலின் தீவிர விசுவாசியான சுக்விந்தர் சிங் சுகு( 58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பதவியை பெறுவதில் மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்த சூழலில், காங்., மேலிடத்தின் தலையீட்டால் பிரச்னை சுமுகமாக தீர்ந்தது.

இன்று(டிச.,11) சுக்விந்தர் சிங் முதல்வராக பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக் முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில், காங்., எம்.பி ராகுல், பொதுச்செயலாளர் பிரியங்கா, காங்., தலைவர் கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து கா.ங்., எம்.பி ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதலவராக சுக்விந்தர் சிங் சுகு மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

latest tamil news

இந்த புதிய தொடக்கத்திற்காக அனைத்து காங்., தொண்டர்களுக்கும் மற்றும் மாநில மக்களுக்கும் வாழ்த்துக்கள். ஹிமாச்சல பிரதேசத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது, வெளியிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் காங்கிரஸ் அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.