Sarathkumar: திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரத்குமார்..பதட்டத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து இன்று குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சரத்குமார். ஆரம்பகாலகட்டத்தில் வில்லனாக தன் திரைப்பயணத்தை துவங்கிய சரத்குமார் மெல்ல மெல்ல ஹீரோவாக முன்னேறினார்.

அதைத்தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான சேரன் பாண்டியன் திரைப்படம் அவருக்கு ஹீரோவாக திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தை அடுத்து நாட்டாமை, சூர்யவம்சம், நட்புக்காக என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் சரத்குமார்.

Thunivu: ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் அஜித்..கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளில் நடித்து தன் ரசிகர்கள் வட்டத்தை பெரிதாக்கினார். நடிகராக மட்டுமல்லாமல் டிவி நிகழ்ச்சி, அரசியல் என ஆல்ரவுண்டராக திகழ்கின்றார் சரத்குமார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்து அனைவரையும் கவர்ந்தார் சரத்குமார்.

இதையடுத்து தற்போது சரத்குமார் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் மிகமுக்கியமான ரோலில் நடித்து வரும் நிலையில் திடீரென சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவ ரசிகர்கள் சரத்குமாருக்கு என்ன ஆனது என்ற பதட்டத்தில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து சரத்குமார் தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது, சரத்குமார் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனைக்கு சென்றார்

எனவும், அவர் பூரண நலமுடன் இருக்கின்றார் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.