Vishal: அந்த விஷயத்தில் மிஷ்கினை மன்னிக்கவே மாட்டேன்..விளாசிய விஷால்..!

தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகர்களில் ஒருவர் தான் விஷால். சமீபகாலமாக இவரை சுற்றி எப்போதும் ஒரு சர்ச்சை இருந்துகொண்டே தான் வருகின்றது. செல்லமே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஷால் சண்டைக்கோழி என்ற படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

அதன் பின் தொடர்ந்து ஆக்ஷன் கதைகளாக தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இந்நிலையில் விஷால் நடிகர் சங்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு தான் அவருக்கு பல பிரச்சனைகள் வந்தன.

Thunivu: ரஜினிக்கு போட்டியாக களமிறங்கும் அஜித்..கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

அவரை சுற்றி எப்போதும் ஒரு பிரச்சனை இருந்து வந்த நிலையில் இயக்குனர் மிஸ்கினுக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதல் தான் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக இருந்தது. இவர்கள் கூட்டணியில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான துப்பறிவாளன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை மிஸ்கின் விஷாலை வைத்து இயக்கி வந்தார். இப்படத்தையும் விஷால் தயாரிக்க படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. அங்கு இவர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட மிஸ்கின் இப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஷாலை திட்டி தீர்த்தார் மிஸ்கின்.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்கி வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் இதுபற்றி பேசிய விஷால், துப்பறிவாளன் 2 பட விவாகரத்தில் மன்னிக்கவே மாட்டேன். லண்டன் படப்பிடிப்பில் அவர் நடந்துகொண்ட விதத்தால் நான் பெரிதும் காயப்பட்டேன்.

ஒருவேளை அப்படத்தை நான் மிஷ்கினை வைத்து தொடர்ந்திருந்தால் என் தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டிருக்கும். அந்த அளவிற்கு அப்படம் செலவை இழுத்துக்கொண்டே சென்றது. எனவே தான் இது சரிவராது என முடிவெடுத்தேன் என்றார் விஷால். தற்போது அடுத்தாண்டு பிப்ரவரி முதல் மீண்டும் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பை விஷால் துவங்குவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.