திருவாரூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் தெட்சினாமூர்த்தி. இவரது மகன் விக்கி என்ற கணேசன்(20). இவர் நேற்று முன்தின இரவு புத்தாண்டை கொண்டாடுவதற்காக நண்பர்களுடன் சேர்ந்து திருவாரூர் ரயில் நிலையம் அருகே சென்றுள்ளார்.
அப்பொழுது விக்கி, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது, அவ்வழியாக வந்த சரக்கு எதிர்பாராத விதமாக திடீரென ரயில் விக்கி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி விக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து உகந்த திருவாரூர் ரயில்வே போலீசார், விக்கியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.