பொதுமக்களே ரெடியா.. நாளை முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்தும், தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி நாளை முதல் ஜனவரி 14ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 10749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பொங்கல் முடிந்து திரும்புவதற்காக 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை மொத்தம் 15599 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கேகே நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால், 044 24749002 மற்றும் 044 26280445 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.