வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாலியல் புகாரில் சிக்கிய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது விசாரணை நடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (டபிள்யு.எப்.ஐ.,) தலைவராக உ.பி., லோக்சபா எம்.பி., பிரிஜ் பூஷன் சரண் சிங், கடந்த 2011 முதல் உள்ளார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தன.
இதையடுத்து ஒட்டுமொத்த இந்தியாவின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ்பூஷன் சிங்கிற்கு எதிராக போர்க்கொடி துாக்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இவ்விஷயத்தில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சக நடவடிக்கை இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு திருப்தி தரவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து 7 பேர் கொண்ட குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement