
அட்லீ – பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, ‛ராஜா ராணி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தொடர்ந்து விஜய்யை வைத்து ‛‛தெறி, மெர்சல், பிகில்'' என மூன்று படங்களை கொடுத்த இவர் தமிழில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். தற்போது ஹிந்தியில் ஷாரூக்கானை வைத்து ‛ஜவான்' படத்தை இயக்கி வருகிறார்.
அட்லீக்கும், ‛சிங்கம்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்த பிரியாவிற்கும் காதல் மலர்ந்தது. கடந்த 2014ல் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். 8 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான பிரியாவிற்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்வு நடந்தது. இதில் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இந்த தம்பதியருக்கு இன்று(ஜன., 31) ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி பிரியா வெளியிட்ட பதிவு : ‛‛எல்லோரும் சொல்வது சரி தான். இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை. எங்களது ஆண் குழந்தை இங்கே. பெற்றோராக அற்புதமான புதிய சாகசம் இன்று துவங்குகிறது. நன்றியுடன். மகிழ்ச்சியாக…. பாக்கியமாக…'' என பதிவிட்டுள்ளார்.