குழந்தை திருமணம்: அசாமில் 1,800 பேர் கைது| “Zero Tolerance”: Over 1,800 Arrested Across Assam Over Child Marriages

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கவுகாத்தி: அசாம் முழுவதும் குழந்தை திருமணம் தொடர்பாக 1,800 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் ஹிமாண்டா பிஸ்வா சர்மா கூறுகையில், குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் விதிகளை மீறியவர்கள் மீது மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 1,800 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான மனிதநேயமற்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் சகித்து கொள்ள மாட்டார்கள்.

latest tamil news

குழந்தை திருமணம் தொடர்பாக 4 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்று காலை முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு இந்த நடவடிக்கை தொடரும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.