சென்னை: சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என முதன்மைக் கல்வி அலுவலர் உத்தவிட்டுள்ளார். புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.