வாசனைத்திரவிய பாட்டிலைத் திறந்தால் குண்டு வெடிக்கும்படி திரவ வெடிகுண்டுடன் நடமாடிய நபரை ஜம்முகாஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.
முதன்முறையாக சென்ட் பாட்டிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக ஆரிப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அண்மையில் ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவதேவி பக்தர்கள் சென்ற பேருந்து குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் அந்தநபருக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.