விடுதி அறையில் நர்சிங் கல்லூரி மாணவி மர்ம மரணம்.! போலீசார் விசாரணை.!

நர்சிங் கல்லூரி மாணவி விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த சுபஸ்ரீ (20) என்பவர் சென்னை அடுத்த புழல் அம்பேத்கர் சாலையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சுபஸ்ரீ வகுப்பிற்கு வரவில்லை என்பதால் சக மாணவிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்த போது படுக்கையில் சுபஸ்ரீ படுத்திருந்துள்ளார். இதையடுத்து மாணவிகள் சத்தம் போட்டு சுபஶ்ரீயை கூப்பிட்டுள்ளனர். ஆனால் அவர் எழுந்திருக்காததால் சந்தேகமடைந்த மாணவிகள் இதுகுறித்து கல்லூரி ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

இந்நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்றபோது சுபஸ்ரீ மர்ம முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து புழல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மாணவியின் மர்ம உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.