LEO: ஷூட்டிங் ஸ்பாட்டில் முன்னணி நடிகர் செய்த செயல்..செம கடுப்பான தளபதி..!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் LEO என்ற படத்தில் நடித்து வருகின்றார். இதுவரை தளபதி 67 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்திற்கு தற்போது LEO என பெயரிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, சஞ்சய் தத், மிஸ்கின், கௌதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியான வாரிசு திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. இதையடுத்து தற்போது வந்த தகவல் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Thalapathy 67: தளபதி 67 படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இதுதான்..வெளிப்படையாக பேசிய நடிகர்..!

அதாவது வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு தந்தையாக பிரபல நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். அவர் செய்த செயல் தான் நடிகர் விஜய்யை செம கடுப்பில் ஆழ்த்தியுள்ளதாம். என்னவென்றால் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விஜய்யின் படத்தை தயாரிக்க பலமுறை முயற்சி செய்துள்ளார். அதற்காக விஜய்யை சந்திக்க அவர் பல நாட்களாக முயற்சி செய்துள்ளார்.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

ஆனால் விஜய் பிசியாக இருந்ததால் ஆர்.பி.சௌத்ரியை சந்திக்க முடியவில்லை. இதனை ஆர்.பி.சௌத்ரி சரத்குமாரிடம் கூற, சரத்குமார் வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு ஆர்.பி சௌத்ரியை அழைத்துள்ளார். அங்கெ திடீரென விஜய் ஆர்.பி.சௌத்ரியை பார்த்தவுடன் செம ஷாக்காகிவிட்டாராம்.

விஷயம் அறிந்து சரத்குமார் மீது விஜய் செம கடுப்பாகிவிட்டாராம். ஆனாலும் யாரிடமும் இதனை காட்டிக்கொள்ளாது நல்லபடி அனைவரிடமும் நடந்துகொண்டாராம் விஜய். இந்த விஷயத்தை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.