அதானி விஷயத்தில் பதிலளிக்குமாறு மோடியை வலியுறுத்தும் எதிர்க்கட்சிகள்- விகடன் கருத்துக்கணிப்பு முடிவு

அதானி குழுமம் மோசடி செய்ததாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை வெளியிட்ட பிறகு, அதானி குழும நிறுவனப் பங்குகள் கிட்டத்தட்ட சுமார் 110 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவைச் சந்தித்திருக்கின்றன.

அதானி – மோடி

அதோடு டாப் 10 உலகப் பணக்காரர்கள் பட்டியலிலிருந்தும் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டார். இப்படியான சூழலில் அதானி விவகாரத்தில் மோடி பதிலளிக்கவேண்டும் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடப்பட்டது. அதில், “அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது…” என்ற கேள்வி கொடுக்கப்பட்டு, அது `நியாயமானது’, `அவசியமற்றது’, `கருத்து இல்லை’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு

இந்த நிலையில் கருத்துக்கணிப்பின் முடிவில் 75 சதவிகிதம் பேர் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் `நியாயானது’ என்பதைத் தேர்வு செய்திருக்கின்றனர்.

விகடன் கருத்துக்கணிப்பு

அதற்கடுத்தபடியாக 23 சதவிகிதம் பேர் `அவசியமற்றது’ என்பதையும், 2 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை’ என்பதையும் தேர்வு செய்திருக்கின்றனர்.

இதேபோல் ஓ.பி.எஸ் அரசியல் பாதை குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் நடத்தப்படும் கருத்துக்கணிப்பில் பங்குபெற கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்…

https://www.vikatan.com/

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.