“ஆபத்தில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா..” இந்தியா எங்கள் ‘தோஸ்த்’.. – துருக்கி தூதர் புகழாரம்..!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்து, வாழ்வா சாவா என்ற நிலையில் இருக்கும் துருக்கிக்கு தக்க சமயத்தில் இந்தியா கைகொடுத்து உதவியதாக அந்நாட்டு தூதர் ஃபிரட் சுனெல் (Firat Sunel) தெரிவித்துள்ளார்.

இந்தியா எங்கள் தோஸ்த் என்றும், ஆபத்து காலத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடியை சந்தித்த ஃபிரட் சுனெல், நிலநடுக்கத்தால் நேர்ந்த சேதங்கள் குறித்து விவரித்தார்.

துருக்கிக்கு இரண்டு இந்திய போர் விமானங்களில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நிவாரண பொருட்களுடன் விரைந்துள்ளதுடன் மருத்துவ குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.