நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், பாதுகாப்பின்மையும் எப்போதும் இருந்து வருகின்றது. பெண்கள் பள்ளிக்கு, கல்லூரிக்கு அல்லது வேலைக்கு செல்லும் இடங்களில் பல்வேறு ஆண்களால் அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்.
மேலும் அவர்கள் இரவு நேர பயணிகளின் போது சில கயவர்களினால் பாலியல் வன்கொடுமைக்கும், தேவையற்ற பகடிக்கும் ஆளாகின்றனர்.
இது பலரது வாழ்க்கையையும் பெரிய அளவில் புரட்டிப்போட்டு விடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் பெண்களின் அவசர உதவிக்கு அரசு கொடுத்துள்ள எண்களின் விபரங்களை இங்கே பார்க்கலாம்.
இந்த தொடர்பு எண்கள் பெண்களுடைய செல்போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள் :
குழந்தைகள், பெண்கள் காணாமல் போய்விட்டால் – 1094
பெண்கள் மன உளைச்சலில் இருந்தால் – 9911599100
பெண்களுக்கு எதிராக வன்கொடுமை நடக்கும் பட்சத்தில் – 181
பெண்கள் ராகிங், பகடி தொல்லைகளை அனுபவிக்கும் போது – 155222
பெண் குழந்தைகள் பாதுகாப்பு எண் – 1098
பெண்களுக்கான அவசர உதவி எண் – 1091