கபடி வீராங்கனை பலாத்காரம்: பயிற்சியாளர் தலைமறைவு

புதுடெல்லி: டெல்லியின் துவாரகா பகுதியை சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை ஒருவர், தன்னுடைய பயிற்சியாளர் ஜோகிந்தர் மீது பாபா அரிதாஸ்நகர் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2012ம் ஆண்டில் இருந்தே கபடி பயிற்சி பெற்றதாகவும், 2015ம் ஆண்டு பயிற்சியாளர் தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துவிட்டதாகவும், அப்போது எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி 2018ம் ஆண்டு தனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் ரூ.40 லட்சத்துக்கு மேல் வாங்கிக்கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்ட வீராங்கனையிடம் வாக்குமூலம் பெற்றனர். குற்றம் சாட்டப்பட்ட பயிற்சியாளர் ஜோகிந்தர் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.