கலவர வழக்கு: காங்.எல்.ஏ.வுக்கு 6 மாதம் சிறை| 6 months imprisonment for Congress LA in riot case

காந்திநகர்: கலவர வழக்கில் குஜராத் காங்., எம்.எல்.ஏ.வுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

குஜராத்தில் 2010-ல் ஜூனாகத் மாவட்டத்தில் இரு தரப்பு மோதல் கலவரமாக வெடித்தது. இதில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக காங். கட்சியைச் சேர்ந்த விமல் செளதாசமா உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விமல் செளதாசமா தற்போது காங். எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

11 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கு மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விமல் செளதாசமா உள்ளிட்ட சிலருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.