கோவை : காதலியுடன் தகராறு.! மனமுடைந்த காதலன் எடுத்த விபரீதம் முடிவு.!

கோவை மாவட்டத்தில் காதலியுடன் ஏற்பட்ட தகராறில் காதலன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோசன்குமார்(21). இவர் கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரோசன்குமார், தனது சொந்த ஊரை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, ரோசன்குமார் காதலில் காதலியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த ரோசன்குமார் வேலை பார்த்து வரும் நிறுவன வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து சக தொழிலாளிகள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த ரோசன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.