திண்டுக்கல், மருங்காபுரி தேர்தல்களை போல ஈரோடு தேர்தல் வரலாறு படைக்கும் – செங்கோட்டையன்.!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் திண்டுக்கல் மற்றும் மருங்காபுரி தேர்தல்களை போல வரலாறு படைக்கும் தேர்தலாக, இருக்கும் என்று, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் மிக்கது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்களும் இன்றுடன் நிறைவடைய உள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பட்டியலும் 10 தேதி வெளியிடப்பட உள்ளது.

இந்த தேர்தலின் ஒரு பகுதியாக அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக மணல்மேடு பகுதியில் செங்கோட்டையன் மற்றும் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் தெரிவித்ததாவது, “எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில், ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல் கட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், மருங்காபுரி தேர்தல்களை போல, ஈரோடு தேர்தல் வரலாறு படைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.