நெல்லை டவுன் பகுதியில் ஸ்வீட் ஸ்டாலை சூறையாடிய இளைஞர்..

நெல்லை டவுன் பகுதியில் 3 அடி நீள வாளை கொண்டு ஸ்வீட் ஸ்டாலை சூறையாடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை டவுன் சாலியர் தெருவை சேர்ந்த தங்கராஜ் நடத்தி வரும் ஸ்வீட் ஸ்டாலுக்கு நேற்று நள்ளிரவு வாளுடன் வந்த மர்ம நபர், அங்கு ஸ்வீட், காரம் வைக்கப்பட்டிருந்த பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன், ஊழியர்களையும் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில், அவர் அதே பகுதியிலுள்ள அடைக்கலமாதா தெருவை சேர்ந்த மாதவன் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் கஞ்சா விற்பதாக, தங்கராஜ் தரப்பினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததாகவும், இதனை அறிந்த மாதவன், தங்கராஜியின் கடையை சூறையாடிதாகவும் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.