`பணம், நகையை திருடிச் சென்றார்!' – நடிகை ராக்கி சாவந்த் புகாரால், அவர் கணவர் கைது

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் நேற்று இரவு தன்னுடைய கணவர் அடில் கானுக்கு எதிராக மும்பை ஓசிவாரா காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் அடில் தனது நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டதாக தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து அடில் கானைக் கைதுசெய்தனர். ஆனால் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருப்பதாக அடில் கான் தரப்பில் கூறப்பட்டது.

இது குறித்து ராக்கி சாவந்த் வாய்ஸ் மெசேஜில், “அடில் கான் நான் புகார் செய்ததால்தான் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் எனது வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார். என்னை அடித்து உதைத்ததோடு, எனது நகைகள் மற்றும் பணத்தை எடுத்து சென்றுவிட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தபோதும், அழுதுகொண்டே பேட்டியளித்தார். அப்போது அவர், “என்னை எப்போதும் அடித்துக்கொண்டே இருப்பார். அனைத்தையும் மீடியாவில் சொல்வேன் என்று தெரிவித்தேன். உடனே, `உன்னை யார் நம்புவார்கள்’ என்று என்னிடம் கேட்பார். என்னிடம் முழு ஆதாரம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

கைது

ராக்கி சாவந்த சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த அடில் கான் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், கடந்த மாதம்தான் திருமணத்தை முறைப்படி அறிவித்தனர். ஆனால், அறிவித்த சில நாள்களில் தன்னுடைய கணவர், தன்னை ஏமாற்றுவதாகவும், வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். அதோடு திருமணத்தை அறிவித்த ஒரே மாதத்தில் தன்னுடைய கணவரை பிரிந்துவிட்டதாக நேற்று அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.