மட்டக்களப்பு – ஏறாவூர் நகர் பகுதியில் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிங்க கொடியை காட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிரான வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியின் நான்காவது நாளான இன்று (07.02.23) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில், ஏறாவூர் நகர் பகுதியில் பேரணி நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நபர்கள் சிலர் சிங்க கொடியை காட்டியுள்ளனர்.
ஏறாவூர் நகரில் பொலிஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.