Nayanthara: கல்யாணத்துக்கு பிறகு இப்படி மாறிட்டாங்களே நயன்தாரா… இனிமே அதுவும் நடக்குமா?

நடிகை நயன்தாரா கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிலையில் இனிமேல் அதையும் எதிர்பார்க்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

லேடி சூப்பர் ஸ்டார்தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா, அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகும் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.
​ Nayanthara: ஊதா கலர் புடவை… ஸ்லீவ்லெஸ் ஜாக்கேட்டில் திணறடிக்கும் நயன்தாரா… லேட்டஸ்ட் புகைப்படங்கள்!​
கல்லூரி விழாவில் நயன்இந்நிலையில் நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். ஊதா கலர் சேலை, தலையில் கொண்டை மல்லிப்பூ என ஹோம்ளி லுக்கில் பங்கேற்ற நயன்தாரா மாணவர்களுக்கு ஏராளமான அறிவுரைகளை கூறினார். கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியானது என்றும் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்களுடன் ஜாலியாக இருக்கலாம் ஆனால் இந்த நேரத்தில் யாருடன் பழகுகிறீர்கள் என்பது முக்கியமானது என்றார். ​ Mahalakshmi: கடவுள் ரொம்ப கேர்ஃபுல்லா படைச்சிருக்கார்..,. மகாலட்சுமியின் லேட்டஸ்ட் க்ளிக்கை பார்த்து உருகும் நெட்டிசன்ஸ்!​
10 நிமிடங்கள்மேலும் நீங்கள் நல்ல நண்பர்களைத் தேர்வுசெய்து பழக வேண்டும். கெட்ட நண்பர்களோடு சேர்ந்தால், வாழ்க்கை மாறிவிடும். கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் எதிர் காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் கல்லூரி முடிந்து வெற்றியடைந்த நபராக, திறமையானவராக மாறினாலும் பணிவாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். உங்கள் பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தையாவது செலவழியுங்கள். அதில் தான் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றார்.​ Kangana Ranaut warning: வீடு புகுந்து உதைப்பேன்… பிரபல நடிகரை பகிரங்கமாக மிரட்டிய கங்கனா ரனாவத்!​
ரொம்ப மாறிட்டாங்கநயன்தாராவின் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாரா திருமணத்திற்கு பிறகு ரொம்பவே மாறிவிட்டதாக கூறி வருகின்றனர். வழக்கமாக நயன்தாரா இது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார், ஏன் அவர் நடிக்கும் திரைப்படங்களின் புரமோஷன்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் கூட நயன்தாரா பங்கேற்க மாட்டார். இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை நயன்தாராவை விளாசியுள்ளனர். அப்படிப்பட்ட நயன்தாரா கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
​ Prabhas engagement: பாகுபலிக்கு அடுத்த வாரம் நிச்சயதார்த்தம்… யார் கூட எங்கேனு பாருங்க!​
அதுவும் நடக்குமா?திரைப்படங்களின் புரமோஷன்களில் பங்கேற்றால் நடிகைகளுக்கு மரியாதையே இருக்காது என்பதால் அவற்றில் பங்கேற்பதில்லை என்று ஏற்கனவே விளக்கம் கொடுத்திருந்தார் நயன்தாரா. இந்நிலையில் நடிகை நயன்தாரா கல்லூரி விழாவில் பங்கேற்றதை பார்த்த நெட்டிசன்கள் இனிமேல் நயன்தாராவை சினிமா புரமோஷன்களிலும் எதிர்பார்க்கலாமா என கேட்டு வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள் நயன்தாரா எப்போதுமே Money Minded, கல்லூரி விழாவில் பங்கேற்க அவருக்கு பெரும் தொகை வழங்கப்பட்டிருக்கும் அதனால்தான் பங்கேற்றுள்ளார் என்றும் கூறி வருகின்றனர்.
​ வாணி ஜெயராம்… இப்படியும் மரணம் வருமா?​
அடுத்தடுத்து படங்கள்நயன்தாரா தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் ஜெயம் ரவியுடன் இறைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் யாரடி நீ மோகினி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்திலும் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
​ Dancer Ramesh death: பயங்கரமா அடிச்சார்… டான்சர் ரமேஷ் சாகுறதுக்கு முன்னாடி நடந்தது இதான்.. கதறும் இன்பவள்ளி!​
Nayanthara

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.