தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து வந்த ரஜினி சமீபகாலமாக ஒரு ஹிட் படத்திற்காக போராடி வருகின்றார்.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியை சந்திக்க ரஜினியின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. எனவே ஜெயிலர் படத்தின் மூலம் தான் யார் என நிரூபிக்கும் முனைப்பில் தீவிரமாக இருக்கின்றார் ரஜினி.
Aishwarya rajinikanth: பிரபல நடிகருடன் ஒர்கவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..வைரலாகும் வீடியோ..!
அதன் காரணமாக ஜெயிலர் திரைப்படத்தை மிகப்பிரமாண்டமாக உருவாக்க திட்டமிட்ட ரஜினி மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் ஆகியோரை ஜெயிலர் படத்தில் நடிக்க வைத்துள்ளார். மேலும் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றனர்.
இதன் காரணமாக தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகின்றது. இதில் ரஜினி கலந்துகொண்டுள்ள நிலையில் ராஜஸ்தானில் உள்ள தமிழ் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர்.
மேலும் ரஜினியை பார்ப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்தும் ரசிகர்கள் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் காரில் சென்றுகொண்டிருந்த ரஜினியை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுக்க முயன்றனர்.
ஆனால் காரின் கண்ணாடி முடி இருந்ததால் ரசிகர்களால் ரஜினியுடன் புகைப்படம் எடுக்கமுடியவில்லை. இறுதியில் ரசிகர்களுக்காக கார் கண்ணாடியை திறந்து ரஜினி கையசைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.