6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.! பிளஸ்-1 மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 11ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த 6 வயதுடைய சிறுமி சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய 11ஆம் வகுப்பு மாணவன் சிறுமியின் வீட்டிற்குச் சென்று, தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். இதையடுத்து சிறுமியின் தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, சிறுமி இது குறித்து தாயிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் 11ஆம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். பின்பு கைது செய்யப்பட்ட மாணவனை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.