பிபிசி டெல்லி, மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை! மோடியின் அடி மடியில் கை வைத்த பிபிசி

மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் இயங்கி வரும் பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பிபிசி தொலைகாட்சி அலுவலகங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் இன்று காலை 11.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மும்பை, டெல்லி அலுவலகங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் செல்போன்களை அணைத்து வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடனோ, வேறு யாரிடமோ ரெய்டு குறித்து பேசக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக கூறுகின்றனர். டெல்லி, மும்பை மட்டுமல்லாமல் பிபிசி தொலைக்காட்சி அலுவலகங்கள் உள்ள பிற இடங்களிலும் சோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

எடப்பாடி அனுப்பிய தூது: அதிமுக வாக்கு வங்கியில் பெரிய ஓட்டை – எப்படியாவது சரி செய்யணும்!

ஏன் பிபிசி அலுவலகத்தில் ஐடி ரெய்டு?

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு உள்ளிட்ட முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் அரங்கேறியது. இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் இருந்த போது குஜராத் முதலமைச்சராக மோடி பதவி வகித்த போது இந்த கலவரம் நடைபெற்றது.

இந்த சம்பவத்துக்கு பின்னர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நரேந்திர மோடி தங்கள் நாட்டுக்கு வர தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஆவணப்படத்துக்கு பாஜக எதிர்ப்பு!

குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் நரேந்திர மோடிக்கு பங்கு இருப்பதாக பிபிசி நிறுவனம் ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை சமூக வலைதளங்களில் பகிர்வது பல்வேறு விதங்களில் தடுக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் இந்த ஆவணப்படத்தை காங்கிரஸ், இடதுசாரிகள், மற்றும் பிராந்திய கட்சிகள் மொழி மாற்றம் செய்து பொதுமக்களுக்கு திரையிட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், பல்வேறு அமைப்புகள் ஆவணப் படத்தை பொது இடங்களில் திரையிட்டு வருகின்றனர்.

கோத்ரா ரயில் எரிப்பு உள்ளிட்ட மதக்கலவரம் குறித்து பேசும் இந்த ஆவணப்படம் பாஜக மற்றும் நரேந்திர மோடியை குற்றம் சாட்டும் வகையில் இருப்பதால் மத்திய அரசு பல்வேறு விதங்களில் இதை வெளியிட முட்டுக்கட்டை போட்டுவருகிறது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? நெடுமாறன் பின்னணியில் யார்? மீண்டும் தமிழர்களுக்கு தலைவலி!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ள நிலையில் பாஜக மற்றும் மோடிக்கு எதிரான மனநிலையை நாடு முழுவதும் இந்த ஆவணப்படம் உருவாக்கிவிடும் என பாஜக அஞ்சுகிறது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது தனது வருமான வரித்துறையை பிபிசிக்கு எதிராக பாஜக அரசு திருப்பிவிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

பிபிசியில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் வருமான வரி தாக்கல் செய்யாததை காரணம் காட்டி, அந்நிறுவனத்தை அசிங்கப்படுத்தும் நோக்கோடு இந்த ரெய்டு நடத்தப்படுவதாகவும் டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.