டெல்லி விமான நிலையத்தில் ஏர்-இந்தியா நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மும்பைக்கு செல்லவேண்டிய விமானம் தாமதத்தால் நள்ளிரவில் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு 8 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட்டு மும்பை சென்றது.
