உளவுத்துறையில் பணியாற்றும் காவலர் கொலை வழக்கில் தொடர்பு கொண்ட ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசுகின்ற ஆடியோ ஒன்று லீக்காகி தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, சோமங்கலம் பகுதிக்கருகே திமுக வார்டு செயலாளராகவும், ஊராட்சி வார்டு உறுப்பினராகவும் இருந்து வந்த சதீஷ் என்ற நபர், முன் முன்விரோதம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு வெட்டிக் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கில், குன்றத்தூரைச் சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றிய பிரமுகர் எஸ்தர் எனும் யோகேஸ்வரி முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு, கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
எஸ்தர் மற்றும் சோமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றுகின்ற ஐ.எஸ். உளவுப் பிரிவைச் சேர்ந்த காவலர் மாதவன் இருவரும், ஆபாசமாக செல்போனில் பேசிக்கொள்கின்ற ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.