சென்னை: பாஜகவுக்கு எதிராக வரும் 28-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார். மேலும், பெண்களை மிரட்டுகின்றனர் என காயத்ரி ரகுராம் சர்ச்சையை குறிப்பிட்டும் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து, மாநிலத்தின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு முயலும் சனாதன சக்திகளைக் கண்டித்து சென்னையில் பிப்ரவரி 28 ஆம் நாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என இன்று (22.02.2023) கூடிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை நிர்வாகக் […]