முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள்

மகளிர் ரி20 உலக கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் இன்று (23) போட்டியிடவுள்ளன.

8 ஆவது மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 

Cape Town apy; யில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் குழு 1 இல் இருந்து அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும், குழு 2 இல் இருந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இதில் இன்று (23) நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா-இந்தியா அணிகள் மோதவுள்ளன.

இதையடுத்து நாளை (24) நடைபெறும் 2 ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

இதேவேளை இறுதிப் போட்டி எதிர்வரும் 26ஆம் மாலை 6.30 மணிக்கு திகதி நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.