இத்தாலி படகு விபத்து: 43 பேர் பரிதாப பலி| Italy boat accident: 43 dead

ரோம் : இத்தாலி கடல் பகுதியில், நேற்று நடந்த படகு விபத்தில் சிக்கி, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியின் தெற்கு கடல் பகுதி கேலப்ரியாவில், குட்ரோ என்ற நகர் அருகே, 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றபடகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

நேற்று அதிகாலை நடந்த இந்த விபத்தை அடுத்து, இதுவரை 43 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் இத்தாலி கடற்படை, எல்லை பாதுகாப்பு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், ௪௦ பேரை உயிருடன் மீட்டனர்.

படகில் சென்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்; எங்கிருந்து எங்கு சென்றனர் என்பன உள்ளிட்ட எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை.

இவர்கள், எகிப்து அல்லது துருக்கி கடற்கரைப் பகுதியில் இருந்து புறப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.