காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பாகிஸ்தான் நிதி உதவி: பஞ்சாப் முதல்வர் மான் குற்றச்சாட்டு

பாவ்நகர்: குஜராத் மாவட்டத்தின் பாவ்நகரில் நடந்த சமூக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் கூறியதாவது: பஞ்சாபில் காலிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பும் 1,000 பேர் பஞ்சாப் மாநிலத்தின் முழு கருத்தையும் பிரதிபலிக்கிறார்கள் என்று அர்த்தமா? நீங்கள் வேண்டுமானால் காலிஸ்தானுக்கு ஆதரவாக யார் கோஷமிடுகின்றனர் என்று பஞ்சாப் வந்து பாருங்கள். பாகிஸ்தான் மற்றும் இதர வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறும் குறிப்பிட்ட சிலரே காலிஸ்தான் ஆதரவாளர்களாக உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பெரும்பகுதியான எல்லையை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டாலும், அங்கிருந்து டிரோன்கள் பஞ்சாபிற்கு தான் வருகின்றன. ஏனென்றால், பாகிஸ்தானில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் மூலம் டிரோன்கள் பஞ்சாபிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் அவர்கள் வெற்றி பெற பஞ்சாப் அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.