கும் வித் கோமாளியில் இருந்து விலகும் பிரபலம்!!

மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் குத் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் 3 சீசன்களை விட இப்போது நிகழ்ச்சிக்கான வரவேற்பு சற்று குறைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இம்முறை கோமாளிகள், போட்டியாளர்கள் பெரிதாக கவரவில்லை என்பதே காரணம்.

ஆனாலும் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முதல் எலிமினேஷனில் நாய் சேகர் பட இயக்குநர் கிஷோர் வெளியேற இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் என்பதால் வெளியேறப்போகும் போட்டியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், கோமாளி மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில்,”இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன்.

2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுடன் இருப்பேன். எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக கவனம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன்.

குக் வித் கோமாளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எதிர்பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் விலகுவதற்கான காரணத்தை மணிமேகலை அறிவிக்கவில்லை. ரசிகர்கள் பலரும் போக வேண்டாம் என கமென்ட் செய்து வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.