திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள எலாஸ்டிக் கம்பெனியில் பயங்கர தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள எலாஸ்டிக் கம்பெனியில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூர் அடுத்த திருமுருகன் பூண்டி வாவிபாளையம் பகுதியில்  தனியாருக்கு சொந்தமான எலாஸ்டிக்  உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

 இந்நிறுவனத்தில் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் இன்று நிறுவனமானது விடுமுறையில் இருந்த காரணத்தினால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை இதணிடைய மாலை நிறுவனத்தின் ஒரு பகுதியில் இருந்து திடீரென புகை வருவதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீயானது மலமலவென  நிறுவனம் முழுவதும் பரவ நிறுவனத்தில் இருந்த எலாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து  சேதம் அடைந்தது  சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.