திருமலையில் மார்ச் மாதம் உற்சவங்கள்

திருமலை: திருமலையில் மார்ச் மாதத்திற்கான உற்சவங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருமலையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள சிறப்பு உற்சவங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 3ம் தேதி(வெள்ளிக்கிழமை)  குலசேகர ஆழ்வார் வருட திருநட்சத்திரம், 3ம் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் 7ம் தேதி(செவ்வாய்கிழமை) வரை ஏழுமலையான் கோயில் தெப்பல் உற்சவம் நடைபெறும்.

7ம் தேதி(செவ்வாய்கிழமை) குமாரதாரா தீர்த்த முக்கோட்டி பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படும். 18ம் தேதி(சனிக்கிழமை) அன்னமாச்சார்யாவின் நினைவு தினம்,  மார்ச் 22ம் தேதி(புதன்கிழமை) ஷோபக்ரித் ஆண்டு உகாதி(தெலுங்கு வருட பிறப்பு) ஏழுமலையான் கோயிலில்  உகாதி ஆஸ்தானம். மார்ச் 30ம் ேததி(வியாழக்கிழமை) ராமநவமி ஆஸ்தானம், மார்ச் 31ம் தேதி(வெள்ளிகிழமை) ராமர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில், பக்தர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.