‘நமக்கான நேரம் வந்துவிட்டது’ – எதிர்கட்சிகளுக்கு பிரியங்கா காந்தி அழைப்பு.!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் திரிபுரா மாநிலத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மேலும் கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வருகிற மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பாஜகவின் மூத்த தலைவர்கள், முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் வரும் நாடாளுமன்ற தேர்தல், கூட்டணி, தேர்தலில் மேற்கொள்ளப்பட் வேண்டிய உத்திகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று
காங்கிரஸ்
முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் நாடு முழுவதும் உள்ள கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட சுமார் 15 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்றனர்.

பாரத் ஜோடோ யாத்திரையுடன் எனது அரசியல் பயணம் முடிந்துள்ளது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த யாத்திரை ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்திய மக்கள் நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சமத்துவத்தை பெரிதும் விரும்புகிறார்கள் என்பதை இது நிரூபித்துள்ளது.

ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர்களுக்கு ஆதரவாக ஆளும் பாஜக செயல்படுவதன் மூலம் பொருளாதார அழிவை ஏற்படுத்தியது. மேலும் சக இந்தியர்களுக்கு இடையில் பயம் மற்றும் வெறுப்பின் நெருப்பை எரியூட்டுகிறது. இது மிகவும் துன்பகரமானது.

அரசு சிறுபான்மையினரை குறிவைத்து, அவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளை புறக்கணித்தது. ஆளும் அரசு பெண்களுக்கு எதிரானது, தலித்துகளுக்கு எதிரானது மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிரானது. அது காந்திஜியை கேலி செய்தது மற்றும் அரசின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் நமது மதிப்புகள் மற்றும் நமது அரசியலமைப்பின் மீதான அவமதிப்பை வெளிப்படுத்துகிறது’’ என கடுமையாக குற்றம்சாட்டினார்.

இந்தநிலையில் மாநாட்டின் கடைசி நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அவர் கூறும்போது, ‘‘இப்போது நமக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ளது. எதிர்க்கட்சியாகிய நம்மிடம் மக்களிடம் இருந்து தீவிர எதிர்பார்ப்புகள் உள்ளன. எதிர்கட்சிகளாகிய நாம் ஒன்றிணைய வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்க்கு நோட்டிஸ்; ரோகிணி ஐஏஎஸ் அதிரடி.!

அனைத்து எதிர்கட்சிகளும், பாஜகவின் சித்தாந்தத்தை எதிர்க்கும் மக்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும். அனைவரிடமும் எதிர்பார்ப்புகள் உள்ளன, ஆனால் அதிக எதிர்பார்ப்பு காங்கிரஸிடம் இருந்துதான். பாஜகவை எதிர்த்து போராட உங்களுக்கு தைரியம் இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், அந்த தைரியத்தை நாட்டுக்காக வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.