நாளை உதயநிதியின் முதல் டெல்லி பயணம்!!

அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக நாளை டெல்லி செல்கிறார்.

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலினுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் அவர் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இந்நிலையில் உதயநிதி அமைச்சர் ஆன பிறகு நாளை முதல்முறையாக டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் 28ஆம் தேதி மத்திய அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதேபோல் சர்வதேச அளவிலான போட்டிகளை சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்த மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி விரைவில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கு மற்றும் பரப்புரை தொடங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்தும் உதயநிதி ஸ்டாலினின் டெல்லி பயணத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.