பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியில் இருந்து விலகுவதாக வெளிவரும் கூற்றானது முற்றிலும் பொய்யானது என பிரதமரது ஊடக பேச்சாளர் லலித் ரோஹன லியனகே தெரிவித்துள்ளார்.
அவ்வாறே பிரதமருக்கு தமது பதவியிலிருந்து விலகுமாறு எந்தவொரு தரப்பிலிருந்தும் கோரிக்கையோ அழுத்தமோ மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சதித்திட்டம்
இது அரசாங்கம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.