புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி வருகை ரத்து| Vice Presidents visit to Puducherry cancelled

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலையில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள 29வது பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்று, 31,857 மணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதன்முதலாக வருவதால் அவரது வருகைக்கான ஏற்பாடுகளை செய்வதில் புதுவை அரசு தீவிரம் காட்டியது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு நடத்தினர். இந்நிலையில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. நிர்வாக பிரச்சினைகள் காரணமாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.