ஸ்கூட்டர் மீது மோதிய டிப்பர் லாரி.. அதில் பயணித்த தாத்தாவும் 6 வயது பேரனும் பரிதாப பலி..!

உத்தரபிரதேசத்தில் தாத்தாவும் பேரனும் பயணித்த ஸ்கூட்டர் மீது மோதிய டிப்பர் லாரி, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்கூட்டரை இழுத்துச் சென்றது.

மஹோபா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் உதித் நாராயண் சன்சோரியா என்பவர், தனது 6 வயது பேரன் சாத்விக்குடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று ஸ்கூட்டரின் பின்பக்கம் மோதியதில் உதித் சம்பவ இடத்திலேயே தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார்.

ஸ்கூட்டர் மீது மோதிய லாரியை ஓட்டுநர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற நிலையில், சிறுவன் சாத்விக் ஸ்கூட்டருடன் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தான்.

அவ்வழியாகச் சென்றவர்கள் லாரியை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.