எம்.எல்.ஏ. கொலை வழக்கில் சாட்சியை கொன்ற கொலையாளி என்கவுன்டரில் கொலை| MLA A killer who kills a witness in a murder case is killed in an encounter

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேசத்தில், எம்.எல்.ஏ., கொலை வழக்கின் முக்கிய சாட்சி நேற்று பட்டப் பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை தேடி வந்த போலீசார் இன்று என்கவுன்டர் முறையில் சுட்டுக்கொன்றனர்.

உத்தர பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சிஎம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜு பால் என்பவர், கடந்த 2005ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உமேஷ் பால் உள்ளார். நேற்று பிரயாக்ராஜ் நகரில் தன் சொகுசுக் காரில் வீட்டிற்கு வந்திறங்கிய போது பின்புறமாக வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் உபேஷ் பால் நோக்கி சுட்டுவிட்டு தப்பியோடினார். இதில் உபேஷ் பால் குண்டு காயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரு போலீசார் காயமடைந்தனர்.

latest tamil news

தகவலறிந்த போலீசார் தப்பியோடிய கொலையாளியை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் கொலையாளி பிரக்யாராஜ் நேரு பார்க் பகுதியில் பதுங்கியுள்ள இடத்தை சுற்றிவளைத்தனர்.அப்போது இரு சக்கர வாகனத்தில் தப்பியோட முயன்ற போது அவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் கொலையாளி பெயர் அர்பாஸ் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணை நடக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.